Banner Wishes

செய்திகள்

Friday, November 1, 2013

இப்படியும் ஒரு "இன்சூரன்ஸ்' - ரயிலில் "வித்-அவுட்'களை காப்பாற்ற

ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைக் காப்பாற்ற நூதன முறையில் மோசடிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு புதிய ரயில்கள், புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தினாலும், அதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில்லை என்பது நீண்ட கால புகாராக உள்ளது. அலுவலர் பற்றாக்குறையால், ரயில்வே துறைக்கு வர வேண்டிய வருவாயும் குறைந்து, நஷ்டம் அதிகரித்து வருகிறது.

Wednesday, September 18, 2013

தமிழைத் தாங்கி வந்த ஐபோனின் புதிய வரவுகள் 5S மற்றும் 5C

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. 

போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

Monday, September 2, 2013

யு.எஸ்.பி (USB)-ஐ உங்கள் கணினியின் சாவியாக பயன்படுத்த வேண்டுமா?

உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். 

இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது. இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.

Monday, July 29, 2013

உஷார்!!! உஷார்!!! இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response Team India (CERT-In) என்ற அமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய ட்ரோஜன் வகையை  சார்ந்த Trojan win32 / Beebone (பீ போன்) வைரஸானது மிக வேகமாக இந்தியாவில் பரவிவருகிறது. இந்த  வைரஸ் பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் ஊடுருவ வழிவகுக்கும் தன்மை கொண்டது. 

CERT-In அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் (Auto Run)  வசதி மற்றும் தேவையில்லாத அப்டேட்களை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். 

Monday, July 22, 2013

60வது பிலிம்பேர் விருதுகள் முழு விபரம்

தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

Sunday, June 23, 2013

சுட்டிகளுக்கென பாதுகாப்பான தனி தேடு இயந்திரங்கள்

இணைய உலகில் கூகுளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்படும் கூகுள் தளத்தை (Google) நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள். இணையத்தில் தகவல்களைத் தேட நீங்களே பல முறை இந்தத் தேடு இயந்திரத்தைப் (சர்ச் இஞ்சின்) பயன்படுத்தி இருப்பீர்கள்.

கூகுள் போலவே வேறு பல தேடு இயந்திரங்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கு என்றே தனியாகத் தேடு இயந்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புத் தேடு இயந்திரங்களும் இருக்கின்றன.

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எளிமையானவை. சுட்டிகளுக்கு ஏற்ற வகையில் வண்ணமயமானவை கூட.

உணவு முறை - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட...

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். 

முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --1/2 கிலோ
வெந்தயம் ---1/4 கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

Monday, June 17, 2013

விகடனனின் "இன்ஜினீயரிங் கவுன்சிலிங் செல்வோர்க்காண A-z வழிகாட்டி"

பொறியியல் பட்டப்படிபிற்க்கான கலந்தாய்விற்கு செல்லும் மாணவ/மாணவிகளே,  கலந்தாய்வு பற்றிய சந்தேகங்களுக்கு A to Z எளிமையான வழிகாட்டி!

#.
வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

#. மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்

Thursday, June 13, 2013

160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வருகிறது

செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில்,  தந்தி சேவையை  வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

Saturday, June 8, 2013

கூகுள் மற்றும் பேஸ்புக்கை உளவு பார்க்கும் அமெரிக்கா...

கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன என அமெரிக்கா கவலையுற்றுள்ளது. 

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Saturday, May 18, 2013

மீண்டும் ஒரு காதல் சின்னம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.

Wednesday, May 8, 2013

+2 தேர்வு முடிவுகள் - இணையதளங்கள், எஸ்.எம்.எஸ் விபரங்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,  காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதனை ஒட்டி  தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அறிவித்தார். கலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் பின்வருமாறு:
அரசு இணையதளங்கள்:
பிற இணையதளங்கள்:
மேலும்,  பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு "TNBOARD <REGISTRATION NO><DOB>" என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையம்('நிக்'), மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

Saturday, April 13, 2013

நம்முடனே உடன்கட்டை ஏறும் நம் இணைய தகவல்கள் - கூகுள் புதிய வசதி

இன்றைய நவீன வலையுலகத்தில், நம்மில் பலரும் நமது தனிப்பட்ட மற்றும் சுயவிபரங்கள்  கோப்புகள்,புகைப்படங்களை பகிர்ந்து / சேமித்து வைத்துள்ளோம். ஒரு வேளை நாம் "இவ்வுலகிலே"  இல்லாத போது அல்லது நாம் இணைய உலகை விட்டு நிரந்தரமாக வெளிவரும் போது, இணையத்தில் உள்ள நம் மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும்..? என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. 

Wednesday, April 10, 2013

திண்டுக்கல், தஞ்சை - நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்வு!!!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 26, 2013

சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் "OUT"

 "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை,  போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். 

இதை அடுத்து, இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

Monday, March 25, 2013

உணவே மருந்து - பைபாஸ் சர்ஜரி தவிர்க்க சிறந்த வழி

நண்பர்களே கவனியுங்கள்.!.!. இது உண்மைச் சம்பவம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

Sunday, March 24, 2013

சிறந்த 100 விசை பலகை விசைகள்(Shortcut Keys)



100 Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C - (Copy)
2. CTRL+X - (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)

Saturday, March 16, 2013

பரதேசி - பாலாவின் வெற்றி படைப்பு

பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலைத் தோட்டத்தில்  அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலியை தாங்கி வெளிவந்திருக்கும் இயக்குனர் பாலாவின் படைப்பு.

கதையானது  1939ம் ஆண்டுதென்தமிழ்நாட்டில் இருக்கும் சாலூர் எனும் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அக்கிராமத்தில் தண்டோரா போட்டு சேதி சொல்லி பிழைப்பு நடத்தும் ஒட்டு பொறுக்கி (எ) ராசா (அதர்வா), தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் அவ்ஊரிலே வசிக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா) சற்று எல்லை மீறிய காதல். இதன் விளைவாக ங்கம்மா கர்ப்பமடைகிறாள். தன் காதலியை கைப்பிடிக்க, நல்ல பிழைப்பைத் தேடி, பயணப்படுகிறார் ராசா.........

Saturday, February 23, 2013

தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1

போர் அடிக்குதா..? இல்ல வேலை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி,  செஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு  தான் நம்ம கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து  கொள்ளுங்கள்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Thursday, February 14, 2013

தமாசு.. தமாசு..திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.



உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். 

Wednesday, February 6, 2013

கேப்டனை கலாய்த்து சட்டசபையில் சொல்லப்பட்ட குட்டிக் கதை!


தமிழக முதல்வர் அவர்கள் விழாக்களில், சட்டசபையில் பேசும்போதும் குட்டிக் கதைகளை கூறுவார். ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தை கதையின் மூலமாக, விளக்கினால், அது மக்களை எளிதாக சேரும் ,கவரும் என்பதால், இந்த பாணியை கடைபிடித்து வருகிறார்.

அவரது பாணியை, அப்படியே அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அக்கதையாவது:

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!

"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.

Tuesday, February 5, 2013

பயர்பாக்ஸ் மற்றும் குரோம் - ல் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவது எப்படி?

புக் மார்க் (Bookmark)  :-  இணைய உலாவிகளில் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் முன்னிலையில் உள்ளன. இவற்றில் அதிகம் பயன்பத்தபடும் வசதிகளில் ஒன்று தான் இந்த புக் மார்க் (Bookmark). இதன் மூலம் நாம் அடிக்கடி உலவும், நமக்கு பிடித்த, இணையதள முகவரிகளை குறித்து / சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு சேமித்த புக் மார்க்குகளை, தவறுதள்ளாக அழித்துவிட்டால், என்ன செய்வது?

கவலைவேண்டாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவதற்க்கான வசதியை கொண்டுள்ளன. பயர்பாக்சை பொறுத்தமட்டில் இச்செயல் மிகவும் சுலபம். ஆனால் குரோமில் சிறிது கடினம். அதற்க்கான வழிமுறைகளை கீழ் காண்போம்.

விஸ்வரூபம் - நீக்கப்பட்ட காட்சிகள் விபரம்

பல்வேறு தடைகள் , சிக்கல்களை கடந்து, ஒரு வழியாக  வருகிற பிப். 7ம்தேதி விஸ்வரூபம் திரைக்கு வரும் என்று உறுதியாகியுள்ளது. 

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது.  அவை பின்வருமாறு:

Sunday, February 3, 2013

உணவு முறை - சூட்டை குறைக்கும் வெந்தயம்


நம் வாழ்வில் நமக்கு பயன்படும், அறியப்படும் சின்ன..சின்ன விஷயங்கள் யாவும் அற்புதமாகவே இருக்கிறது. உதாரணமாக ஒரு பெரிய கோபுரத்தை பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம்.

 நம் ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை,  சின்னச் சின்ன செயல்களை தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை பற்றி இனி  வரும் பதிவகளில் அறிந்து கொள்ளவோம்.  இந்தப் பதிவில் வெந்தயத்தின் பலனை பற்றி பார்க்கலாம்.

6-வது ஐ.பி.எல் ஏல முடிவுகள் - வீரர்கள் வருத்தம்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.)  "20-20' ஓவர் கிரிக்கெட்போட்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து  வந்தது. அதன் தொடர்ச்சியாக  ஆறாவது தொடர் வருகிற ஏப்., 3ம் தேதி துவங்கி, மே 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம், இன்று (பிப். 3) சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.  சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்திய வீரர்கள் 7 பேர் மட்டும் பங்கேற்றுள்ளனர். 101 பேர் கொண்ட பட்டியலில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகம் உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்த ஏலத்தின் முடிவுகள்... (நேரலை கண்ணொளி இணைக்கப்பட்டுள்ளது)

Saturday, February 2, 2013

டேவிட் - கொலைவெறி விமர்சனம்

"ஜீவா", "விக்ரம்" கூட்டணியில், அப்டி, இப்டினு பெரியளவிலான பில்டப் கொடுத்து, கடைசியா பல்ப் வாங்கியுள்ள திரைக்காவியமே "டேவிட்". ஸ்ஸ்..முடியல. சும்மா கொத்து.. கொத்துன்னு.. கொன்னுட்டாங்க..!   
 சரி அப்படி என்னதான் படத்தோட கதை?

Friday, February 1, 2013

கடல் - ஓட்டை விழுந்த கப்பல்

"ராவணன்" பட சரிவிற்கு பிறகு, இயக்குனர் மணிரத்னம்  படைப்பில் வெளிவந்திருக்கும், முழுநீள காதல் திரைப்படம் "கடல்".  அடுத்துக்காக ஒரு அலைபாயுதே, மௌனராகம், ரேஞ்சுக்கு எதிர்பார்த்த, ஏமாற்றமே..!


Thursday, January 31, 2013

ஐபிஎல் 6-வது தொடருக்கான வீரர்கள் ஏலப் பட்டியல்

ஐபிஎல் 20-20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடருக்கான,  கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்காக  101 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயராகி உள்ளது.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏலம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடை பெறவுள்ளது. 

முழுப்பட்டியலை  பார்க்க / தரவிறக்கம் செய்ய: 

சிறை கம்பிகளுக்கு பின்னால் ஒரு சாதனை!

குற்றம் புரிந்தவர்கள், தன் குற்றத்தை உணர்ந்து, மனம் திருந்தி நல்ல  மனிதர்களாக மாற்றுவதற்கான இடமே சிறை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சிறைகள் ஒரு மனிதனை அப்படி தான்   மாற்றுகிறதா? என்றால் ஆம்! இல்லை! என இரு விவாத பதிலே கிடைக்கும்.

ஆனால், குற்றவாளியான ஒருவர் தனது சிறைவாச  காலத்தில் சாதனை மனிதராகியுள்ளார். யார் அவர் ? எப்படி?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு படேல்(57) . மருத்துவரான பானு படேல், கடந்த 2004-ம் ஆண்டு  அன்னியச் செலாவணி  (Foreign Exchange Regulation Act ) வழக்கில் கைதாகி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் 2005 முதல் 2011 வரை சிறையில் இருந்தார். இந்த 6 வருட கால சிறை வாசத்தில்  திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்வியைத்  தொடர்ந்தவர், எம்.எஸ்சி (M.Sc.,) எம்.காம் (M.Com), பி.காம் (B.Com), முதுகலைப் பட்டயப் படிப்புகள் (PG Diploma) என 31  பட்டங்களை வாங்கி குவித்தார். 

Friday, January 25, 2013

இந்திய குடியரசின் தோற்றமும் அதன் வரலாறும்


பதிவுலக நண்பர்களுக்கு "நண்பர்கள் உலகத்தின்" சார்பாக "இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்".

இந்தியக் குடியரசு தினம் இந்திய ஆட்சியமைபுக்கான ஆவணமாக இந்திய ஆரசியல்லமைப்பு 1935 இன் மாற்றாகஇந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்.
இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைநாட்களில் இதுவும் ஒன்று.நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் விழா தொடங்கும்.

விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார்சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விஸ்வரூபம் - அதிரடி விமர்சனம்

DTH ஒளிபரப்பால் தியேட்டர் உரிமையாளார்கள் பிரச்சனை, முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்,
"வரும் ஆனா வாராது" என்பது போல, தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரமாண்டாக இன்று வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சைகளே விஸ்வரூபத்திற்கு "விஸ்வரூப" விளம்பரமாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சரி உலக  நாயகனின் "ரூபத்தை"  பற்றி பார்ப்போம்.

கதையானது  பாயிண்ட் டு பாயிண்ட் போல அமெரிக்காவில் துவங்கி, ஆப்கானிஸ்தான் போய், பிறகு அங்கிருந்து  மீண்டும் அமெரிக்கா வந்து, மீதி கதையை  "விஸ்வரூபம்" பகுதி 2ல் பாருங்கள் என்று சொல்லி முடிவடைகிறது. 

ஹீரோயின் பூஜா குமார் தன் மேற்ப்படிப்பிற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், விருப்பமே இல்லாமல் கமலை திருமணம் செய்து கொள்கிறார். 


Thursday, January 24, 2013

வாலு திரைப்படத்தின் - ஒரு பாடல் தரவிறக்கம் செய்ய

சிம்பு, ஹன்சிகா  நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் "வாலு" திரைப்படத்தின்  லவ்னுங்கறவன் நீ யாருடா... என்ற ஒரு பாடலின் "Promo" இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அதனை தரவிறக்கம் செய்ய.....