Banner Wishes

செய்திகள்

Tuesday, January 22, 2013

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 1


குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள்அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாதுகுழந்தைகள் உலகம் மிக விந்தையானதுவேடிக்கையானதுவிநோதமானதுஎவராலும் எளிதாக நுழைய முடியாதுஅதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும்அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்லஅவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்லஅவர்கள் இயற்கையின் வெளிப்பாடுஉங்கள் எதிர்பார்ப்புகளைவிருப்பங்களைஎண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்ஏனென்றால் "ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.


"அடிக்கிற கைதான் அணைக்கும்என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாதுஅணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமாபேசி புரிய வைக்கலாம்நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம்செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான்இல்லாவிட்டால் அவனும் "அடிக்கிற கை அணைக்கும்என்பான்.

படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறதுமிருகங்களை அடித்துதுன்புறுத்திபார்வையாளர்களை மகிழ்விக்கும் "ரிங் மாஸ்டரைப்போல குழந்தைகளை அடித்துதிருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, "குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?

குழந்தைகள் மீதான வன்முறை :குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள்அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் "எதுசரி" "எதுதவறுஎன்று சொல்லிக் கொடுக்கவேண்டும். "சேட்டைஎன்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட "சனியனேசனியனே".."பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்குஎன்று திட்டுவோம்ஆக "சேட்டைஎன்பது குழந்தையை மையப்படுத்தி அல்லநம்மை மையப்படுத்தி இருக்கிறதுமுதலில் அதை உணர்வோம்.அடுத்துகுழந்தை தன்னையோமற்றவரையோமற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே விதிகளை சொல்லிவிட வேண்டும்விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும்நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களாஇல்லையா?

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களாஅடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமாகண்டிப்பாக என்பது *இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவதுசில குழந்தைகள் *நான் உன் கூட பேசமாட்டேன்என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும்இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜிஉண்டு

பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும்பொறுமையின்மையின் காரணமாகவேலைப்பளுவின் காரணமாகநேரமின்மையின் காரணமாகஇப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றனஅடிப்பதும்மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களேகுழந்தைக்கு என்ன உரிமைகுழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டுஇன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவாஇப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளதுஉதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்அப்போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு

தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்திஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் *பார் பிடிவாதத்தைஅப்படியே அது அப்பனை..* கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது

ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறதுவாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால்அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடுஅடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறதுஇந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியதுஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த மகனை தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார்அந்த குழந்தைதன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால்கடையில் இருப்பதை வாங்கி வருகிறான்இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தைஇது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறைதகப்பன் குடித்தது முதல் தவறுதன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறுதூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறுஅவனை அடித்தது மிக மோசமான தவறுஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம் இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும்நிறைய நேரங்களில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இதெல்லாம் வன்முறையாநாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்றுஇப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?

அடுத்த பதிவில் தொடரும்....
நன்றி - இன்று ஒருதகவல்

1 comment:

  1. வன்முறை எந்தமுறையில் நடந்தாலும் தவறுதான் ..

    ReplyDelete