Banner Wishes

செய்திகள்

Friday, November 1, 2013

இப்படியும் ஒரு "இன்சூரன்ஸ்' - ரயிலில் "வித்-அவுட்'களை காப்பாற்ற

ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைக் காப்பாற்ற நூதன முறையில் மோசடிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு புதிய ரயில்கள், புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தினாலும், அதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில்லை என்பது நீண்ட கால புகாராக உள்ளது. அலுவலர் பற்றாக்குறையால், ரயில்வே துறைக்கு வர வேண்டிய வருவாயும் குறைந்து, நஷ்டம் அதிகரித்து வருகிறது.